Friday 17 April, 2009

தேர்தல் சாதனைகள், பார்த்து கருத்தை கூறு !!


1.கொலைஜர் மற்றும் கன்னட தமிழ் துரோகியின் சாதனைகள் !


2.ராமதாஸ் மற்றும் வைகோ'வின் சாதனைகள் !!

3.விஜயகாந்த் சாதனை மற்றும் பொதுமக்கள் நிலைமை !!


4.கொலைஜர்'இன் குடும்ப அரசியல் தாண்டவம் !!






Thursday 2 April, 2009

"அரசியல் வியாதிகள்"

நமது நாட்டின் அரசியலை பற்றி கீழ் கண்ட வரிகள் உணர்த்தும் !!

நம் நாடு நாடு என்று சொல்லாமல், என் வீடு வீடு என்று சொல்லி குடும்ப அரசியல் செய்யும் தமிழ் இனக் கொலைஜரே !
- இனி உனது பக்கம் சூரியன் உதிக்காது !!


ராஜபக்சே'வின் ஒன்று விட்ட சகோதரியான கன்னடத் தமிழ் துரோகியே - நீ
தமிழ் மண்ணை விட்டு இலங்கைக்கோ, கர்நாடகவிற்கோ சீக்கிரம் வெளியேறு !
- இனி உனக்கும் இங்கு இரட்டை இலை உதிரும் காலம் மட்டுமே !!

அம்மா அம்மா என்று துதி பாடி அத் தமிழ் துரோகியிடம் பணியாற்றுகிராயே - இது
நியாயமா ? அங்கு இருந்து வெளியேற வேண்டாமா ?
- இப்படி இருந்தால் உனது பம்பரத்திற்கும் ஆணி மழுங்கி விடும் மறவாதே !!

தேர்தல் வந்தவுடன் மக்களையும், குறிக்கோளையும் மறந்து - நீ
சுயரூபம் காண நினைகிராயே , இது உனக்கு அடுக்குமா ?
- உனக்கும் ஒருநாள் மாம்பலம் சீசன் முடிவடையும் மறவாதே !!

கேப்டன் என்று சொல்லி 24 மணி நேரமும் குடி போதையில் திரியும் - உனக்கு
நாட்டை ௦பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா ? மக்களை திரும்ப கோமாளி ஆக்காதே !
- இங்கு கண்டிப்பாக உனது முரசு முழங்காது தெரிந்து கொள் !!

இந்த அரசியல் வியாதிகள் திருந்த வேண்டாமா ? நம் நாடு செழிக்க வேண்டாமா ?
இந்த அரசியல் வியாதிகளுக்கு மருந்து உங்கள் கையில் !! - நம்
நாட்டை பற்றி சிந்திப்பவனை கோட்டைக்கு அனுப்புங்கள், இல்லை வீட்டிற்கு அனுப்புங்கள் !!
   ---->தமிழ் குடிமகன் நிர்மல் !!

Saturday 28 March, 2009

இது போதும் எனக்கு!!

இது போதும் எனக்கு!!

மாலை நேரம்
கடற்கரை ஓரம்
மடி தனில் அவள்
ஒலிந்து கொள்ளும் நிலவு

இது போதும் எனக்கு!!

இருட்டிருந்தும் கண்களில் ஒளி
மறைத்திருந்தும் மறக்காத மேனி
அணைத்திருந்தும் அகலாத பிரிவு
அனைதிருந்தும் தீராத மோகம்

இது போதும் எனக்கு!!

தனியாக ஒரு தீவு
தண்ணீரில் விளையாடும் கால்கள்
கரம் பிடிக்கும் மென்மை
கண் எதிரே குளுமை

இது போதும் எனக்கு!!

வான் முழுதும் மேகம்
வெளி முழுதும் மழை
கையருகில் அவள் துணை
ஜன்னல் வழி சிறு தூரல்

இது போதும் எனக்கு!!

வெளிநாட்டில் பிள்ளைகள்
லேசாக மூட்டு வலி
எனக்குத் துணை அவள்
அவளுக்குத் துணை நான்

இது போதும் எனக்கு !!

---> ஆனால் நான் இன்னும் அந்த "அவள்" என்பவளுக்கு காத்திருக்கிறேன் !!

Friday 27 March, 2009

தமிழ் ஈழக் கவிதை 2 !!

ஈழமாம் எம் நாட்டில்
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?

வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?
கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?

நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?

இதயங்கள் காணுகின்ற
இன்பக்கன வெல்லாம்
இருள் தனில் தவிக்குதையா
ஒளிதனை ஏற்றி வைக்க
யார் வருவார்?

----------------------------
---> ஈழத் தமிழன் !!
----------------------------

தமிழ் ஈழக் கவிதை 1 !!

ஈழத் தமிழன்

புகழிடம் செல்ல வேண்டிய எங்கள் தமிழனம் இன்று புகலிடம் தேடுகின்றது ஏதிலியாய்

கலை வளர்த்த எங்கள் தமிழினம் இன்று கொலைகளத்தில் ஆனது அதரவற்ற உயிரினம்

இந்திய தமிழன் கண்ணிருடன் இறையாண்மை காக்க இலங்கையில் சிங்கள இன சகோதரனோ படுகொலை நிகழ்த்த எங்கள் வாழ்வோ ஆனது ஈரமற்ற பாலைவனம்

காந்தியை காட்டுகின்றான் இந்திய தமிழன் ஆனால் இங்கு புத்தனைக் காட்டியே கொல்கிறான் சிங்கள சகோதரன் விழித்து எழுவோம் என்று புரபட்டவனோ புலிகளாய் மாறி இன்று நரிகளாய் நிற்கின்றான்

இவ்வுலகில் எங்களை காபாற்ற வேண்டிய மனிதம் கூட காலம் கேட்கிறதே

இலங்கையில் அமைதி தமிழினம் அழிந்து பிறகு உறுதி

----------------------------------------------------------------
- வேதனையுடன் ஈழத்தமிழனாய் ஒரு இந்திய தமிழன்
----------------------------------------------------------------